சென்னை: பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் சபாநாயகருடன் சட்டப்பேரவை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு உடன் பேரவை செயலாளர் சீனிவாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். பொன்முடி வழக்கில் ஐகோர்ட் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதன் மூலம் பொன்முடி எம்.எல்.ஏ.வாக தொடர வாய்ப்பு உள்ளது.
சபாநாயகருடன் பேரவை செயலாளர் ஆலோசனை
previous post