Monday, June 17, 2024
Home » வதனமே சந்திர பிம்பமே…

வதனமே சந்திர பிம்பமே…

by Nithya

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் தங்கள் முகத்தை அழகாகவும், வசீகரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அப்படி அழகாக வைத்துக் கொள்ள சில எளிய முறைகளை கையாண்டு
வந்தால் போதும் அழகாக மாறிவிடும்.

* உருளைக்கிழங்கு சாற்றுடன் சம அளவு தேன் கலந்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் சருமம் பளிச்சென்று மாறிவிடும்.

* நன்கு பழுத்த பப்பாளி பழத்தின் சாற்றை முகத்தில் தேய்த்தால், வடுக்கள் மாறி முகம் பொலிவு பெறும்.

* தயிரை முகத்தில் பூசி, ஊற வைத்து பின்பு முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

* கசகசாவை ஊறவைத்து, அரைத்து முகத்தில் பூசி, பின்பு வெது வெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் முகச் சுருக்கங்கள் நீங்கி அழகாக இருக்கும்.

* பாலுடன் சில துளிகள் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் ேசர்த்து முகத்தில் பூசி ஊறவைத்து, கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

* வாழைப் பழத்தை கூழாக்கி, அதனுடன் தேனை கலந்து முகத்தில் பூசி, ஊறவைத்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

* கடலை மாவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்து கலந்து முகத்தில் பூசிஊற வைத்து, குளித்து வந்தால் முகம் நல்ல நிறத்துடன் அழகாக மாறும்.

* பாலுடன் எலுமிச்சை சாறை சேர்த்து அத்துடன் சிறிதளவு சர்க்கரையை கலந்து முகத்திற்கு பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து பின்பு முகத்தை வெந்நீரினால் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

* வெள்ளரிச் சாறை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பளிச்சென்று பளபளக்கும்.

* தக்காளியை இரண்டாக நறுக்கி, முகத்தில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்பு கழுவினால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறும்.

* சருமம் வறண்டு இருந்தால் கற்றாழை ஜெல்லுடன் தேன் கலந்து முகத்தில் தடவலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முகம் பொலிவடையும்.

* மஞ்சளை பச்சைப் பாலில் கலந்து முகத்தில் தடவி வர, சில நாட்களில் முகம் பளபளக்கும்.

* இரண்டு தேக்கரண்டி அரிசி மாவுடன் மூன்று தேக்கரண்டி பால் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து, முகத்தில் தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும். 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமை மறையும். இது போன்ற எளிய வழிமுறைகளை பின்பற்றி பளபளப்பான முகப்பொலிவுடன் வலம் வரலாம்.

அ.திவ்யா, காஞ்சிபுரம்.

You may also like

Leave a Comment

3 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi