சென்னை: சட்டவிதிகள் ஆய்வுக்குழு தலைவராக திரு.வி.க.நகர் எம்எல்ஏ தாயகம் கவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை 2023-24ம் ஆண்டுக்கான ஆய்வுக்குழு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சட்டவிதிகள் ஆய்வுக்குழு தலைவராக திருவிக நகர் திமுக எம்எல்ஏ தாயகம் கவி(எ)சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினர்களாக திமுக எம்எல்ஏக்கள் ஈஸ்வரப்பன்(ஆற்காடு), எபினேசர் (ஆர்.கே.நகர்), சரவணன்(கலசப்பாக்கம்), சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்), செல்வராஜ்(திருப்பூர் தெற்கு), ஆர்.டி.சேகர்(பெரம்பூர்), அதிமுக எம்எல்ஏக்கள் அர்ஜூனன்(திண்டிவனம்), செந்தில்நாதன்(சிவகங்கை), பாலசுப்பிரமணியன்(சேலம் தெற்கு), ஜெயராம்(சிங்காநல்லூர்), ராமச்சந்திரன்(காங்கிரஸ்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.