புதுக்கோட்டை: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 12 வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப் பாய்ந்து வருகிறது. காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்குகின்றனர். பொதுமக்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.