தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். காட்டு பன்றிகளை வேட்டையாடிய கடற்கரை(60), பால்துரை (37), பெரியமுருகன்(48) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். மான் கொம்புகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.