தென்காசி: சிபிசிஐடி போலீஸில் உளவுப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறி போலி பணி நியமன ஆணை தயாரித்து மோசடி செய்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். செங்கோட்டை பாஜக நகர பொதுச்செயலாளராக உள்ள பாலகிருஷ்ணனை மோசடி வழக்கில் போலீஸ் கைது செய்தது. கடையநல்லூரைச் சேர்ந்த பார்த்தசாரதியிடம் போலி நியமன ஆணை வழங்கி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக பாஜக நிர்வாகி பாலகிருஷ்ணன் மீது புகார் அளித்துள்ளனர்.