கோவை: கடந்த 2 நாட்களில் வெள்ளியங்கிரி மலை ஏறிய மூன்று பக்தர்கள் உயிரிழந்த நிலையில் வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் இணைந்து தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கபப்ட்டுள்ளது. இரண்டு குழுக்களாக 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ குழு, கோயில் அடிவாரத்தில் அமைக்கபப்ட்டுள்ளது. தேவைப்படும் பக்தர்கள் மருத்துவ முகாம்களை பயன்படுத்த வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.