சென்னை: கோயில் தேர் திருவிழாவில் அசம்பாவிதம் நடக்காத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தஞ்சை, கும்பகோணம் தேர் திருவிழாக்களில் அரசு அதிகாரிகளின் கவனக் குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. கோயில் தேர் மின் கம்பங்களில் சிக்குவதும், சாலை பள்ளத்தில் சிக்குவதும் நடப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கோயில் தேர் திருவிழாவில் அசம்பாவிதம் நடக்காத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா கேட்டுக் கொண்டுள்ளார்.