அவனியாபுரம்: தேஜ கூட்டணில் இருந்து இதுவரை எங்களுக்கு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னையில் இருந்து மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தின் தீர்மானத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று கூறுவது உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிற்கும் எதிரான சட்டவிரோதமான செயல். நாம் 17 ஆண்டுகள் போராடி பெற்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த முடியாது என்று கர்நாடக அரசு கூறினால், இந்திய அரசியல் சட்டத்தை அவர்கள் மதிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். திமுக அரசு முறையான சட்ட நடவடிக்கை அல்லது பேச்சுவார்த்தை மூலமாக துரித நடவடிக்கை எடுத்து, உரிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேஜ கூட்டணியில் இருந்து அழைப்பு ஏதும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. சசிகலாவை நான் இதுவரை பார்க்கவில்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். எங்களது புரட்சிப் பயணத்தின் அடுத்தகட்டம் குறித்து தகவல் தெரிவிப்போம்.இவ்வாறு கூறினார்.
தேஜ கூட்டணியிலிருந்து எங்களுக்கு அழைப்பில்லை: ஓபிஎஸ் ஆதங்கம்
previous post