Sunday, May 5, 2024
Home » சென்னை விமான நிலையத்தின் 4வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை விமான நிலையத்தின் 4வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை

by Mahaprabhu

சென்னை: விமான நிலைய வளாகத்தில் உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து இளம்பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொழிச்சலூர் கமிஷனர் காலனியில் வசிப்பவர் பாலாஜி. இவர், தற்போது அமெரிக்காவில் ஹவுஸ் கீப்பிங் வேலையில் இருக்கிறார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா (33). இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணி அளவில் அந்த மல்டி லெவல் கார் பார்க்கிங்கற்கு வந்து, சுற்றிப்பார்ப்பது போல் மாடி மீது ஏறியுள்ளார். 4வது மாடிக்கு சென்றவர், திடீரென அங்கிருந்து கைப்பிடி சுவரைத்தாண்டி கீழே குதித்துள்ளார்.

இதையடுத்து அங்குள்ள பாதுகாவலர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விமான நிலைய அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் இளம்பெண் ஐஸ்வர்யா, அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 108 ஆம்புலன்ஸ் மருத்துவர் வந்து ஐஸ்வர்யா, உயிரிழந்ததை உறுதி செய்தார்.இதையடுத்து விமான நிலைய போலீசார் இளம்பெண் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஐஸ்வர்யாவின் கணவர் வெளிநாட்டில் உள்ளதால், 9ம் வகுப்பு படிக்கும் மகன், 5ம் வகுப்பு படிக்கும் மகள் ஆகியோருடன் ஐஸ்வர்யா பொழிச்சலூரில் தனியே வசித்து வந்தார். இவர், நேற்றுமுன்தினம் இரவு, தனது மகன் மகளை அழைத்துக் கொண்டு, சென்னை விமான நிலைய மல்டி லெவல் கார் பார்க்கிங்கில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சினிமா தியேட்டரில், படம் பார்க்க வந்திருந்தார்.

4வது மாடியில் அமைந்துள்ள தியேட்டரில் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, பிள்ளைகளை தியேட்டருக்குள் விட்டு விட்டு, ஐஸ்வர்யா மட்டும் நைசாக வெளியில் வந்து, தடுப்புச் சுவரைத் தாண்டி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. ஐஸ்வர்யா, கடந்த சில நாட்களாக கடுமையான மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அது பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்துகின்றனர். பாதுகாப்பு மிகுந்த ஏர்போர்ட் பகுதியில் இளம் பெண், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

2 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi