மதுரை: சட்டவிரோதமாக மணல்எடுப்பதாக தொடர்ந்த வழக்கில் தஞ்சை ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்டோர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அகமது ஹாஜா என்பவர் தொடர்ந்த வழக்கைஉயர்நீதிமன்ற மதுரை கிளை ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. பட்டுக்கோட்டை அருகே உள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மணல்எடுப்பதாக வழக்கு தொடரப்பட்டது.