Sunday, May 12, 2024
Home » தமிழக அரசியல் வரலாறு தெரியாத அரசியல் அனுபவமற்ற அரசியல்வாதி அண்ணாமலை: டிடிவி.தினகரன் கண்டனம்

தமிழக அரசியல் வரலாறு தெரியாத அரசியல் அனுபவமற்ற அரசியல்வாதி அண்ணாமலை: டிடிவி.தினகரன் கண்டனம்

by Karthik Yash

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசியல் வரலாற்று அறிவு ஏதுமின்றி ஜெயலலிதா பற்றி அண்ணாமலை ஆங்கில பத்திரிகையில் வெளிப்படுத்திய கருத்து, அவரது அறியாமையையும், அனுபவமற்ற தனத்தையும் வெளிக்காட்டுகிறது. சென்னை மெரினா கடற்கரையில், வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தி, அதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கலந்துகொண்டு, ஜெயலலிதாவின் ஆளுமையைப் பற்றி புகழ்ந்து பேசியதை உலகம் கேட்டது. தமிழகத்தில் அப்போது பாஜவுக்கான வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா மட்டுமே. அதற்காக கடுமையான பிரசாரங்களை மேற்கோண்டதோடு, அவர் அமைத்த அந்த கூட்டணி மக்கள் ஆதரவோடு பெரும் வெற்றியைப் பெற்றுக் காட்டியது. இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

You may also like

Leave a Comment

4 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi