டெல்லி: தமிழக ஆளுநர் ரவியை மாற்றக் கோரி வைகோ அளித்த கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆளுநரை மாற்றக் கோரி 50 லட்சம் கையெழுத்துகளை பெற்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைகோ ஒப்படைத்திருந்தார். வைகோவின் கடிதம் உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.