சென்னை: தமிழக அரசில் அனைத்து நிலை பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலிவுறுத்தியுள்ளார். நேர்முகத்தேர்வு தகுதியும் திறமையும் கொண்ட பலரின் வாய்ப்புகளை பறித்து விடுவதாக ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் சம நீதியும், சமுகநீதியும் கிடைக்க நேர்முகத்தேர்வு பெருந்தடையாக உள்ளது. அது நீக்கப்பட வேண்டும்.