சென்னை: தமிழ்நாடு அரசின் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் சிலம்பண்ணன், அருண் ஆகியோர் ராஜினாமா செய்தனர். 11 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் இருந்த நிலையில் தற்போது இருவர் ராஜினாமா செய்தனர். தமிழ்நாடு அரசு பிளீடராக இருந்த பி.முத்துக்குமாரும் ராஜினாமா செய்தார். அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரம் ராஜினாமா செய்த நிலையில் மேலும் சிலர் ராஜினாமா செய்தார். புதிதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், அரசு பிளீடரை தமிழ்நாடு அரசு நாளை அறிவிக்க உள்ளது.