சென்னை: தமிழ் நாடு டாக் எனும் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் அனைவரும் வருகை தர வேண்டும் என பொது நூலக இயக்குநர் இளம் பகவத் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலை அரங்கில், நான்காவது ‘டி.என். டாக்’ நிகழ்ச்சி இன்று(26ம் தேதி) மாலை 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில், ரமோன் மகசேசே விருது பெற்ற டாக்டர் பிரகாஷ் ஆம்தே மற்றும் டாக்டர் மந்தாகினி ஆம்தே ஆகியோர் பங்கேற்று, ஒடிசி ஆப் கம்யூனிட்டி சர்விஸ்: அ பர்சனல் ரெப்லக்சன்’ என்ற தலைப்பில் உரையாற்றி பார்வையாளர்களுடன் கலந்துரையாடவுள்ளார்கள். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம், விருப்பம் உள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.