சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகமாக உள்ளதாக தவறான தகவல்களை எடப்பாடி பழனிசாமி பரப்பி வருகிறார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். தொடர்ந்து தவறான தகவல் பரப்புவதால் எடப்பாடி பழனிசாமி மீது ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக ஆட்சியில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.