சென்னை: தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் சிப்காட் அமைக்க விளைநிலங்களை அரசு கையகப்படுத்தக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை தமிழக அரசு கொள்கை அறிவிப்பாக வெளியிட வேண்டும். செய்யார் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் திட்டத்தை அரசு ரத்து செய்யவேண்டும் எனவும் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.