டெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் கர்நாடக அரசு மெத்தனமாக உள்ளது என அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை சந்தித்த பிறகு அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு ஒன்றிய அமைச்சர் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.