சென்னை: தமிழகம் முழுவதும் 47 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக காவல்துறையில் டிஎஸ்பி பணியிடங்கள் காலியாக இருப்பதால் அவற்றை நிறப்ப, தற்போது இன்ஸ்பெக்டர்களாக உள்ள 47 பேருக்கு பதவி உயர்வு வழங்கும்படி டிஜிபி அலுவலகத்தில் இருந்து உள்துறைக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதைப் பரிசீலித்து 47 இன்ஸ்பெக்டர்களுக்கும் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து விரைவில் அவர்களுக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.