சென்னை: தமிழகத்தில் 31 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்டா, தென் மாவட்டங்கள் உள்ளிட்ட 31 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.