Monday, April 29, 2024
Home » தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்திருக்கிறது: சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்திருக்கிறது: சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

by Neethimaan
Published: Last Updated on

சேலம்: தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்திருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சேலம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது வெள்ளிப் பாத்திரத்தில் மோடிக்கு ஜவ்வரிசி நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அர்த்த நாரீஸ்வரர் சிலை மற்றும் சேலத்தில் புகழ்பெற்ற போர்வையும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி;

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்திருக்கிறது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் மக்கள் ஆதரவை நாடே ஆச்சரியமாக பார்க்கிறது. பாஜக 10 ஆண்டுகளில் செய்த சாதனையின் பலனாக 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். ஏப்ரல் 19-ம் தேதி ஒவ்வொரு ஓட்டையும் தே.ஜ. கூட்டணிக்கு வழங்க தமிழகம் முடிவு செய்து விட்டது. பாமகவின் வருகையால் தேசிய ஜனநாயக கூட்டணியின் கரம் வலுவடைந்துள்ளது.

ராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் திறமையும் கூட்டணிக்கு உதவும். ராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் திறமையும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும். சேலத்திற்கு பலமுறை வந்துள்ளேன், இன்று பழைய நினைவுகள் எனக்கு வருகின்றன. சேலம் ரத்னவேல் எனக்கு தமிழ் கற்றுத் தர முயற்சித்தார்; அவர் இன்றைக்கு நம்முடன் இல்லை. சேலத்தின் பெருமைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார் ரத்னவேல்; அதன் மூலம் சேலத்தின் மீது எனக்கு ஈர்ப்பு. ஆடிட்டர் ரமேஷ் மரணம் குறித்து பேசிய போது பிரதமர் கண் கலங்கினார்.

கேதார்நாத்தை போன்று தமிழகத்தை புண்ணிய பூமியாக மாற்றுவோம். தமிழ்நாட்டில் 3.65 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் கிடைக்கிறது. உங்களுடைய சேவகனான இந்த மோடி, பெண்களின் நலனுக்காக பல நல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். இன்று பெண்கள் சக்தி மோடியின் பாதுகாப்பு கவசமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நலத்திட்டங்கள் இன்னும் வேகமாக பெண்களுக்கு வந்து சேரும் எனவும் கூறினார்.

 

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi