சென்னை: தமிழ்நாட்டு பல்கலை கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கையில் சமூக நீதியை நிலைநிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தகுதி மதிப்பெண்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% சலுகை வழங்க விதித்துள்ள கட்டுப்பாடு இயற்கைக்கு முரணாக உள்ளது. தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டுப் பல்கலை கழகம் விதித்த கட்டுப்பாடு சமூக நீதிக்கு எதிராக உள்ளது. இடஒதுக்கீட்டுக்கான விதிகளை மாநிலங்களின் நடைமுறைக்கு ஏற்றவாறு கூட செயல்படுத்தவில்லை என அவர் தெரிவித்தார்.