சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுமற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழகதின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கனமழை பெய்யத நிலையிலும் வழக்கமாக தண்ணீர் தேங்கூடிய இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. மழையால் ஏற்பட்ட படிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சரிசெய்தனர். தமிழகதில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.