Tuesday, May 14, 2024
Home » தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.33.6 லட்சம் மதிப்பில் சாலை மழைநீர் வடிகால்வாய் பணி: எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.33.6 லட்சம் மதிப்பில் சாலை மழைநீர் வடிகால்வாய் பணி: எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

by Karthik Yash

தாம்பரம்: தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.33.6 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவஞ்சேரி ஊராட்சி பரந்தாமன் தெரு, முத்தாலம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் போதிய பராமரிப்பு இல்லாமல், 2 சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால் 2 தெருக்களில் புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். வேம்புலி அம்மன் கோயில் தெருவில் மழைநீர் வடிகால்வாய் இல்லாததால், மழைக்காலங்களில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால், வேம்புலி அம்மன் கோயில் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைத்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சார்பில், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, அதிகாரிகளிடம் பொதுமக்களின் கோரிக்கையை கொண்டு சென்று எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ முயற்சியில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பரந்தாமன் தெருவில் 160 மீட்டருக்கு புதிய சாலை அமைக்கும் பணி, முத்தாலம்மன் கோயில் தெருவில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் 160 மீட்டருக்கு புதிய சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 2 சாலை பணிகள் மற்றும் வேம்புலி அம்மன் கோயில் தெருவில் ரூ.12.6 லட்சம் மதிப்பீட்டில் 300 மீட்டருக்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது.

மொத்தம் ரூ.33.6 லட்சம் மதிப்பிலான பணிகளை நேற்று தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தொடங்கி வைத்தார். அப்போது, பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய தலைவர் சங்கீதா பாரதிராஜன், துணை தலைவர் பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி சுரேஷ்பாபு, ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

nineteen + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi