தைபே: தைபே(தைவான்)யில் நடைபெறும் தைபே ஓபன்-2023 பேட்மின்டன் போட்டியின் காலிறுதியில் விளையாட இந்தியாவின் பிரணாய் தகுதிப் பெற்றுள்ளார். தைபே ஓபனில் நேற்று காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், இந்தோனேசியாவின் டொம்மி சுகிர்தோ ஆகியோர் களம் கண்டனர். மலேசிய ஓபன் சாம்பியனான பிரணாய் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனை தாக்குப் பிடிக்க முடியாமல் சுகிர்தோ தடுமாற 36 நிமிடங்களில் பிரணாய் 21-9, 21-17 என நேர் செட்களில் வென்றார். காலிறுதிக்கும் முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதியில் ஹாங்காங் வீரர் லாங் ஆன்கசை எதிர் கொள்ள உள்ளார். முன்னதாக 2வது சுற்று ஒற்றையர் பிரிவில் களம் கண்ட இந்திய வீரர் பாருபள்ளி காஷ்யப், வீராங்கனை தன்யா ஹேமநாதன், கலப்பு இரட்டையர் பிரிவில் களமிறங்கிய ரோகன் கபூர்/சிக்கி ரெட்டி என அனைவரும் தைபே ஆட்டக்காரர்களிடம் தோல்வியை சந்தித்து வெளியேறினர்.
தைபே ஓபன் பேட்மின்டன் காலிறுதியில் பிரணாய்
previous post