சிரியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்; 23க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. சைதா ஜெயினா புனித தலத்தில் வெடிகுண்டுடன் இருந்த கார் வெடித்து சிதறியதில் 6 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதன் அருகில் இருந்தவை முற்றிலும் சேதம் அடைந்தன.