சென்னை: செயற்கை இழைகள், விஸ்கோஸ் இழைகளுக்கு தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாயச் சான்று பெறும் முறையால் பாதிப்பு ஏற்படும் என ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசின் தரக் கட்டுப்பாட்டு ஆணை, ஜவுளித் தொழிலில் தற்போது நடந்து வரும் பணிகளில் தடைகளை ஏற்படுத்தும். விஸ்கோஸ் பஞ்சு, செயற்கை இழை பஞ்சு மற்றும் நூல்களுக்கு தரக் கட்டுப்பாட்டு ஆணைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.