வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியு டவுன் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்(45). இவர் அதே பகுதியில் மளிைக கடை வைத்துள்ளார். கடந்த மாதம் தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரவிக்குமார், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகாததால், அவரை மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு கடந்த ஒரு மாதமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ரவிக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, ரவிக்குமார் மளிகை கடை நடத்தி வந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.