சென்னை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். அதில்; சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு கலைஞர் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படும். சென்னை, கோவை, திருச்சியில் ரூ.1.14 கோடியில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மையங்கள் அமைக்கப்படும். 17,312 அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களுக்கு ரூ.25.70 கோடியில் புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும். சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நவீன தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.