நன்றி குங்குமம் தோழி
கோடை வந்துவிட்டாலே நாம் மின்விசிறி கீழே அமர்ந்து இருந்தாலும், வியர்த்துக் கொட்ட ஆரம்பிச்சிடும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பலர் பயண நேரத்தில் ஏற்படும் வியர்வையால் பல அவதிகளை சந்தித்து வருகிறார்கள். அதை போக்க சில டிப்ஸ்…
*கோடையில் ஏற்படும் வியர்வையையும், வியர்வை நாற்றத்தையும் போக்க தக்காளிச் சாறை நீரில் கலந்து குளித்து வந்தால் வியர்வை குறையும்.
*ரோஜா இதழ்கள், ஆவாரம்பூ, சந்தனத்தூள், பாசிப்பயறு மாவு ஒரு ஸ்பூன் கலந்து கரைத்து உடலில் பூசி குளித்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.
*பூண்டு, வெங்காயம், கொழுப்பு உணவுகள், சூடான, காரமான உணவுகள் போன்றவற்றை தவிருங்கள்.
*தினமும் இரு முறை குளியுங்கள். மோர், இளநீர், திராட்சைப்பழம், பழச்சாறும் குடிக்கலாம்.
*ரோஜா, ஆரஞ்சு தைலத்தை நீரில் இட்டு குளித்தால் வியர்வை நாற்றம் போகும்.
*அக்குளில் கடலைமாவு, பாசிப்பருப்பு மாவை தேய்த்து வாரம் இரண்டு முறை குளித்து வந்தால் வாடை மறையும். தினமும் எலுமிச்சை சாறை நீரில் கலந்து கால் மணி நேரம் கழித்து குளிக்க கிருமிகளும் நீங்கி வாடை போகும்.
*இரவில் ரோஸ் வாட்டரில் சந்தனப்பொடி சேர்த்து குழைத்து அக்குளில் பூசி வர வியர்வை சுரப்பியில் இருக்கும் கெட்ட பாக்டீரியா அழிந்து வாடை குறையும். தினமும் குளிக்கும் முன்பு கெட்டித் தயிரை ரோஸ் வாட்டருடன் குழைத்து அக்குளில் பூசினாலும் வாடை வராது.
*புதினா இலையுடன் தயிர் சேர்த்து அரைத்து பூசி காயவிட்டு குளிர்ந்த நீரில் கழுவினாலும் வியர்வை நாற்றம் போகும்.
*வேப்பிலையுடன், மஞ்சள் சேர்த்து அரைத்து அக்குளில் தடவி குளித்து வந்தாலும் வியர்வை நாற்றம் போகும்.
– எஸ்.மாரிமுத்து, சென்னை.
காட்டன் ஆடைகள் பராமரிக்க டிப்ஸ்
வெயில் காலத்திற்கு ஏற்ற உடை பருத்தி ஆடைகள். அதை பராமரிப்பது கொஞ்சம் சிரமம் என்றாலும் இதைப் பின்பற்றினால் அதனை எளிதாக பராமரிக்கலாம்.
*முதல் இரண்டு முறை காட்டன் ஆடைகளை கண்டிப்பாக தனியாக ஊற வைத்து துவைப்பது நல்லது.
*வாஷிங் பவுடர் தண்ணீரில் நன்றாக கரைந்த பிறகே துணிகளை ஊறவைக்க வேண்டும்.
*துணிகளை அதிக நேரம் ஊற வைப்பதனால் துணியினுடைய லைப் டைம் குறையவும், நிறம் ெவளுக்கவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
*நேரடி சூரிய வெளிச்சம் இல்லாத இடங்களில் உலர்த்தினால் நீண்ட நாட்கள் நிறம் மங்காமல் இருக்கும்.
*துவைத்த பிறகு அயர்ன் செய்து உடுத்தினால் கூடுதல் அழகாக இருக்கும்.
*காட்டன் ரகங்களுக்கு ஸ்டீரிம் அயர்ன் செய்தால் கூடுதல் அழகாகவும் நிறம் வெளுக்காமலும் இருக்கும்.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.