Monday, May 6, 2024
Home » வியர்வை நாற்றத்தை போக்க!

வியர்வை நாற்றத்தை போக்க!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

கோடை வந்துவிட்டாலே நாம் மின்விசிறி கீழே அமர்ந்து இருந்தாலும், வியர்த்துக் கொட்ட ஆரம்பிச்சிடும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பலர் பயண நேரத்தில் ஏற்படும் வியர்வையால் பல அவதிகளை சந்தித்து வருகிறார்கள். அதை போக்க சில டிப்ஸ்…

*கோடையில் ஏற்படும் வியர்வையையும், வியர்வை நாற்றத்தையும் போக்க தக்காளிச் சாறை நீரில் கலந்து குளித்து வந்தால் வியர்வை குறையும்.

*ரோஜா இதழ்கள், ஆவாரம்பூ, சந்தனத்தூள், பாசிப்பயறு மாவு ஒரு ஸ்பூன் கலந்து கரைத்து உடலில் பூசி குளித்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.

*பூண்டு, வெங்காயம், கொழுப்பு உணவுகள், சூடான, காரமான உணவுகள் போன்றவற்றை தவிருங்கள்.

*தினமும் இரு முறை குளியுங்கள். மோர், இளநீர், திராட்சைப்பழம், பழச்சாறும் குடிக்கலாம்.

*ரோஜா, ஆரஞ்சு தைலத்தை நீரில் இட்டு குளித்தால் வியர்வை நாற்றம் போகும்.

*அக்குளில் கடலைமாவு, பாசிப்பருப்பு மாவை தேய்த்து வாரம் இரண்டு முறை குளித்து வந்தால் வாடை மறையும். தினமும் எலுமிச்சை சாறை நீரில் கலந்து கால் மணி நேரம் கழித்து குளிக்க கிருமிகளும் நீங்கி வாடை போகும்.

*இரவில் ரோஸ் வாட்டரில் சந்தனப்பொடி சேர்த்து குழைத்து அக்குளில் பூசி வர வியர்வை சுரப்பியில் இருக்கும் கெட்ட பாக்டீரியா அழிந்து வாடை குறையும். தினமும் குளிக்கும் முன்பு கெட்டித் தயிரை ரோஸ் வாட்டருடன் குழைத்து அக்குளில் பூசினாலும் வாடை வராது.

*புதினா இலையுடன் தயிர் சேர்த்து அரைத்து பூசி காயவிட்டு குளிர்ந்த நீரில் கழுவினாலும் வியர்வை நாற்றம் போகும்.

*வேப்பிலையுடன், மஞ்சள் சேர்த்து அரைத்து அக்குளில் தடவி குளித்து வந்தாலும் வியர்வை நாற்றம் போகும்.

– எஸ்.மாரிமுத்து, சென்னை.

காட்டன் ஆடைகள் பராமரிக்க டிப்ஸ்

வெயில் காலத்திற்கு ஏற்ற உடை பருத்தி ஆடைகள். அதை பராமரிப்பது கொஞ்சம் சிரமம் என்றாலும் இதைப் பின்பற்றினால் அதனை எளிதாக பராமரிக்கலாம்.

*முதல் இரண்டு முறை காட்டன் ஆடைகளை கண்டிப்பாக தனியாக ஊற வைத்து துவைப்பது நல்லது.

*வாஷிங் பவுடர் தண்ணீரில் நன்றாக கரைந்த பிறகே துணிகளை ஊறவைக்க வேண்டும்.

*துணிகளை அதிக நேரம் ஊற வைப்பதனால் துணியினுடைய லைப் டைம் குறையவும், நிறம் ெவளுக்கவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

*நேரடி சூரிய வெளிச்சம் இல்லாத இடங்களில் உலர்த்தினால் நீண்ட நாட்கள் நிறம் மங்காமல் இருக்கும்.

*துவைத்த பிறகு அயர்ன் செய்து உடுத்தினால் கூடுதல் அழகாக இருக்கும்.

*காட்டன் ரகங்களுக்கு ஸ்டீரிம் அயர்ன் செய்தால் கூடுதல் அழகாகவும் நிறம் வெளுக்காமலும் இருக்கும்.

– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

You may also like

Leave a Comment

1 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi