நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஒரு மணிநேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.