நீலகிரி: கோடை சீசன் முடிந்ததால் உதகைக்கு நாளை (ஜூன் 1) காலை முதல் வழக்கம்போல் இருவழித்தடங்களிலும் வாகனங்கள் இயக்கலாம் என்று நீலகிரி மாவட்ட எஸ்.பி. பிரபாகர் அறிவித்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகைக்கும், உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் கோத்தகிரி வழியாக கடந்த ஒருமாதமாக வாகனங்கள் இயக்கப்பட்டன