சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வலியுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் டெல்டா மாவட்டங்களில் வரும் 11ம் தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.