சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை போல் கடலூர் என்.எல்.சி. நிறுவனத்தை மூட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடவிருந்த காரணங்கள் அனைத்தும் என்.எல்.சி. நிறுவனத்துக்கும் பொருந்தும். மண்ணுக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நிறுவனங்கள் அனைத்தையும் மூட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.