சாத்தூர், ஏப்.27: சாத்தூர் அருகே கர்ப்பிணி பெண் மாரியார் கொடுமையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மல்லையநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் உத்தண்ட்காளை(30). முதல் மனைவி இவரது 2வது மனைவி வர்ஷ்னி(22). ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது வர்ஷ்னி நான்கு மாதம் கர்ப்பிணியாக இருந்தார். வர்ஷினிக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை சொல்லி மாமியார் சோலையம்மாள், மாமனார் கருப்பசாமி கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இதில் மனமுடைந்த வர்ஷினி மொபைலில், என்னை மாமனார், மாமியார் கொடுமைப்படுத்தி வருவதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு நேற்று முன்தினம் காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாமியார் சோலையம்மாள் மற்றும் மாமனார் கருப்பசாமி ஆகிய இருவரிடம் அப்பையநாயக்கன்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தற்கொலைக்கு தூண்டியது உறுதியானதால் இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.