Saturday, July 27, 2024
Home » இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை

by MuthuKumar

புழல்: புழல் அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கால்பந்து விளையாட ஷூ வாங்கி தராததால் ஒரு வாலிபர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சென்னை புழல் அருகே காவாங்கரையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர் குடும்பங்கள் தங்கியுள்ளனர். இங்கு வசிக்கும் எஸ்.சிவலிங்கம் என்பவரின் மகன் சாமின்ஷன் (17). இவர் கால்பந்து விளையாடுவதற்காக, கடந்த சில நாட்களாக பெற்றோரிடம் ஷூ வாங்குவதற்கு ₹2 ஆயிரம் தரும்படி கேட்டு வந்துள்ளார். எனினும், அவருக்கு ஷூ வாங்கி தரமுடியாமல் பெற்றோர் பரிதவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சாமின்ஷன் கடும் மனஉளைச்சலுடன் இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த 14ம் தேதி வீட்டில் தனியே இருந்த சாமின்ஷன், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி சாமின்ஷன் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே சோகம் நிலவியது.

You may also like

Leave a Comment

15 − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi