சென்னை: இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானம் மூலம் பவதாரிணியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து, இன்று பவதாரிணி உடல் சென்னை வந்தது. பவதாரிணி உடல் அஞ்சலிக்காக தியாகராய நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் வைக்கப்பட உள்ளது