*அறங்காவலர் குழு தலைவர் எடுத்துச்சென்றார்
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் திருப்பதி தாத்தய்ய குன்டா கெங்கை அம்மனுக்கு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு திருப்பதி தொகுதி எம்எல்ஏ கருணாகர் முன்னிலையில் கெங்கையம்மனுக்கு சீர்வரிசை பொருட்கள் (பட்டுவஸ்திரங்கள், பூஜை பொருட்கள்) ஊர்வலமாக எடுத்துச்சென்று வழங்கினர். இவர்களுக்கு முன்னதாக கெங்கை அம்மன் கோயில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கோபி யாதவ் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர்.
தொடர்ந்து அஞ்சூரு. தாரக சீனிவாசலு தம்பதியினர் பட்டு வஸ்திரங்களை தலை மீது சுமந்து ஊர்வலமாக கோயிலில் வந்துக் கெங்கை அம்மனுக்கு சம்பிரதாய முறைப்படி வழங்கினார்கள்.
இவர்களுக்கு கெங்கைஅம்மன் கோயில் வேதப் பண்டிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்ததோடு சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் திருப்பதி துணை மேயர்கள் நாராயண பிரதாப் மற்றும் காளஹஸ்தி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் சிவன் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.