Sunday, June 16, 2024
Home » 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இலங்கை: சமரவிக்ரமா பொறுப்பான ஆட்டம்

5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இலங்கை: சமரவிக்ரமா பொறுப்பான ஆட்டம்

by Ranjith

லக்னோ: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 19வது லீக் ஆட்டத்தில், நெதர்லாந்துடன் மோதிய இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை வசப்படுத்தியது. வாஜ்பாய் ஏகனா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நெதர்லாந்து 21.2 ஓவரில் 91 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. கோலின் ஆக்கர்மேன் 29, மேக்ஸ் ஓ தாவுத், கேப்டன்ஸ்காட் எட்வர்ட்ஸ் தலா 16 ர எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

இந்த நிலையில், சைப்ரண்ட் எங்கல்பிரெக்ட் – லோகன் வான் பீக் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்தனர். சைப்ரண்ட் 70 ரன் (82 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), வான் பீக் 59 ரன் (75 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். நெதர்லாந்து அணி 49.4 ஓவரில் 262 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஆர்யன் தத் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் மதுஷங்கா, கசுன் ரஜிதா தலா 4 விக்கெட், தீக்‌ஷனா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 263 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. குசால் பெரேரா 5 ரன், கேப்டன் குசால் மெண்டிஸ் 11 ரன் எடுத்து ஆர்யன் தத் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த பதும் நிசங்கா 54 ரன் (52 பந்து, 9 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார்.

ஒரு முனையில் சதீரா சமரவிக்ரமா உறுதியுடன் விளையாட, சரித் அசலங்கா 44 ரன் (66 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), தனஞ்ஜெயா டிசில்வா 30 ரன் (37 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். இலங்கை அணி 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன் எடுத்து முதல் வெற்றியை ருசித்தது. சமரவிக்ரமா 91 ரன் (107 பந்து, 7 பவுண்டரி), துஷான் ஹேமந்தா 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சமரவிக்ரமா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi