சியோல்: வடகொரியா தென்கொரியா நாடுகளிடையேயான நீண்டநாள் மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. இதனிடையே அமெரிக்கா – தென்கொரியா நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி, தென்கொரியாவில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள், அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் போன்ற சக்தி வாய்ந்த ராணுவ தளவாடங்கள் நிறுத்தி வைப்பு போன்றவை அதிகரித்துள்ளதால் வடகொரியா ஆத்திரமடைந்துள்ளது. இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், “தென்கொரியா எங்கள் முக்கியமான எதிரி. தென்கொரியாவை தூண்டும் நாடுகளை அழித்து விடுவோம்” என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.