சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லும் TNSTC பேருந்துகளும் நாளை (ஜன.30) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் என போக்குவரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் புறப்படும். கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 710 TNSTC பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 160 TNSTC பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் அறிவுத்துள்ளார்.