Sunday, June 16, 2024
Home » தந்தை இறந்ததால் மேம்பாலத்தில் இருந்து குதித்து மகன் தற்கொலை

தந்தை இறந்ததால் மேம்பாலத்தில் இருந்து குதித்து மகன் தற்கொலை

by Dhanush Kumar

திருச்சி: திருச்சி பாலக்கரை ஆழ்வார்தோப்பை சேர்ந்த அல்லாபிச்சை மகன் முகமது ரியாஸ் (23). டிப்ளமோ படித்துவிட்டு வேலை எதுவும் இன்றி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நிலையால் பாதிக்கப்பட்டு இருந்த அல்லாபிச்சை நேற்றுமுன்தினம் இறந்தார். இதனால் மனஉளைச்சலில் இருந்த முகமது ரியாஸ், நேற்றுமுன்தினம் இரவு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே அரிஸ்டோ ரவுண்டானாவுக்கு வந்தார். அப்போது திடீரென 50 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த முகமது ரியாஸ், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

one × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi