போடி: தேனி மாவட்டம், போடி அருகே அணைக்கரைப்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்தவர் நம்பெருமாள்(49). விவசாயி. மனைவி நிர்மலாதேவி. மகன் ராகுல்ராஜ் (15). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். நிர்மலாதேவி 5 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் நம்பெருமாள், தினமும் மது குடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மது போதையில் வீட்டிற்கு வந்த நம்பெருமாள், விஷமாத்திரையை பாலில் கலந்து மகனுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்தார். இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு நம் பெருமாள் , மகன் ராகுல்ராஜ் நேற்று மாலை உயிரிழந்தார்.
மகனை கொன்று தந்தை தற்கொலை
previous post