டெல்லி: சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சூரிய ஒளி மின்சக்தியை நிறுவன ‘பிரதம மந்திரி சூர்யோதயா யோஜனா’ திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின் கட்டணம் குறைவது மட்டுமின்றி, எரிசக்தி துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.