மதுரை: சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவுக்கான நிபந்தனை ஜாமினில் ஐகோர்ட் கிளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை போலீஸில் 30 நாள் கையெழுத்திட நிபந்தனை விதித்த நிலையில் சென்னை சைபர் கிரைம் போலீசில் கையெழுத்திட ஆணையிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள உறவினர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என ஐகோர்ட் கிளையில் எஸ்.ஜி.சூர்யா மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், நிபந்தனை ஜாமினில் மாற்றம் செய்து உ த்தரவிட்டார்.