சென்னை: சென்னையில் ஆன்லைனில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற கல்லூரி மாணவி ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாகத் தருவதாக இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி 30 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்திருந்தார்.
சென்னை ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற கல்லூரி மாணவி ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாகத் தருவதாக இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி 30 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்திருந்தார். கடந்த 10 நாட்களாக கொல்கத்தாவில் தங்கி 3 பேரையும் முத்தியால்பேட்டை போலீஸ் கைது செய்துள்ளது.
போலீஸ் விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அடையாளம் தெரியாத நபரிடம் பணத்தை கொடுத்து இழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆன்லைனில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக தருவதாக இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி ரூ.37,000 முதலிடு செய்துள்ளனர். ரூ.37,000 முதலீடு செய்தநிலையில் பணம் திரும்ப கிடைக்காததால் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
மாணவியின் இன்ஸ்டாகிராம் ஐ.டி வங்கி கணக்கு ஆகியவற்றை முடக்கி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களில் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்திகளை அனுப்பும் அடையாளம் தெரியாத நபர்களுடன் பணபரிவர்த்தனை வைத்துக்கொள்ள வேண்டாம் என்று காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.