* பஜ்ஜி செய்யும் போது கடலை மாவு, அரிசி மாவுடன் ஒரு பங்கு மைதா மாவு சேர்த்தால் பஜ்ஜியின் சுவையே அலாதி.
* அடை மாவுடன் கார்ன் பிளேக்சை பொடித்து சேர்த்து அடை சுட்டால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
* தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் செய்யும் போது கொஞ்சம் பொட்டுக்கடலையை வறுத்துக் கொட்டினால் சுவையாக இருக்கும்.
* பால் உறைக்கு ஊற்றும் போது வெதுவெதுப்பாக இருந்தால் தான் தயிர் நன்கு உறையும். சூடாகவோ அல்லது ஆறியதாகவோ இருந்தால் தயிர் சரியாக உறையாது.
* டால்டா, நெய் போன்றவை கெட்டியாக இருக்கும்போது பாத்திரத்தில் இருந்து எடுப்பது சிரமமாக இருக்கும். ஸ்பூனை சூடாக்கிக் கொண்டு எடுத்தால் சுலபமாக இருக்கும்.
* இளம் முள்ளங்கியை இடித்து பிழிந்த ரசம் ஒரு அவுன்ஸ் முதல் இரண்டு அவுன்ஸ் வரையில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறு நீரிலுள்ள அல்புமின் என்ற மாவுச் சத்து குறைந்து விடும்.
* உளுத்தம் பருப்பை வடைக்கு அரைக்கும் போது பச்சரிசியையும் கொஞ்சம் சேர்த்து அரைத்தால் வடை மொறு மொறுவென்று இருக்கும். அதே போல் வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமானால் சிறிது பச்சரிசி மாவினைசேர்த்தால் கெட்டியாகிவிடும்.
* சுட்ட எண்ணெயில் கசடு அதிகமாக இருக்கும். மூன்று, நான்கு உருளைக்கிழங்கு துண்டங்களை அதில் ெபாரித்தெடுத்தால் எண்ணெய் சுத்தமாகி விடும்.
* மிளகாய்ப் பொடி, தனியா, சீரகம் போன்ற மசாலா சாமான்களை ஒரு முறை நன்கு வறுத்துவிட்டு பின்னர் பாட்டிலில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
* தோசைக்கல்லை அடுப்பில் போட்டுக் காய்ந்ததும் அப்பளத்தைப் போட்டு ஒரு சுத்தமான துணியை சுருட்டிக்கொண்டு அப்பளத்தை ஒத்தி எடுங்கள். இரண்டு புறமும் இப்படியே செய்தால் கருகாமல் சுட்ட அப்பளம் கிடைக்கும்.
– கவிதா சரவணன்