கோவை: சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரளாவை கண்டித்து அம்மாநில அரசு பேருந்துகள் கோவையில் சிறைபிடிக்கப்பட்டது. விசிக, மதிமுக, எஸ்.டிபி.ஐ., மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காந்திபுரத்தில் கேரள அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.