சென்னை: எஸ்.ஐ. பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வு முடிவு ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26, 27-ல் 750 காலிப் பணியிடங்களுக்கு நடந்த முதன்மை எழுத்துத் தேர்வை 1.86 லட்சம் பேர் எழுதி இருந்தனர். சுமார் 80 சதவீத விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வில் பங்கேற்றனர் என்று சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.